பாகிஸ்தானில் பிச்சை எடுத்து கொண்டிருந்த அழகான தோற்றம் கொண்ட இளைஞன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் அவன் குறித்து ரகசியத்தை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

Sialkotல் நபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அந்த பக்கமாக வந்த பொலிசார் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

அவரிடம் அமெரிக்க டொலர்கள், பிரித்தானியா பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ந்தனர். அந்த நபரின் முகத்தை கழுவிய போது அவர் டிக் டாக் பிரபலமான யாசிர் என தெரியவந்தது.

பிச்சைக்காரன் போல ஏமாற்றிய யாசிரை பொலிசார் கைது செய்துள்ளனர், யாசிர் ஏன் பிச்சைக்காரம் போல வேடமணிந்தார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top