இலங்கையில், இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.இறுதியா பதிவாகிய கொரோனா மரணங்களில் 3 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.இதன்படி பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர், ஐ.டி.எச்.  வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவர், அங்கொட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

கண்டி பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நாராங்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண்ணொருவர், அங்கொட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top