வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் பத்து காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன.

அதன்படி கடந்த வருடத்தில் செட்டிகுளத்தில் 4 யானைகளும், நெடுங்கேணியில் 3 யானைகளும், வவுனியாவில் 3காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளன.

இதேவேளை தற்போது வவுனியா மாவட்டத்தில் காடு அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையால், காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதோடு, மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், குறித்த பகுதியிலுள்ள மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வாழ்ந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top