தமிழகத்தில், இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த அகதி முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுமியை, புதுக்கோட்டையை சேங்கைத்தோப்பைச் சேர்ந்த தீனதயாளன்(20) என்ற வாலிபர் வன்கொடுமை செய்துள்ளார்.


இதில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாகியதால், இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீனதயாளன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top