மின் விநியோகம் தடைப்பட்ட நிலையில் சுமார் 40 பவுண் நகை கொள்ளை..! கொள்ளை நடந்ததை

இன்றுதான் அறிந்த உரிமையாளர், யாழ்.வல்வெட்டித்துறையில் சம்பவம்..



 


 

மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி வீட்டிலிருந்த சுமார் 40 பவுண்

தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது.


நேற்றய தினம் சடுதியாக மின் விநியோகம் தடைப்பட்ட நிலையிலேயே கொள்ளை சம்பவம்

இடம்பெற்றிருப்பதாகவும் இன்றைய தினமே நகைகள் கொள்ளையிடப்பட்டதை


வீட்டின் உரிமையாளர் அறிந்ததாகவும் தொிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை

– இலகாடு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.




 

சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்

முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், மின் விநியோகம் தடைப்பட்டிருந்தபோது


வீட்டில் தங்கியிருந்த உறவினர்கள் மீது அவர் சந்தேகம் தொிவித்திருக்கின்றார். இந்நிலையில்

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top