கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை எவ்வாறு அடக்கம் செய்வது குறித்த சுற்றறிக்கை வெளியாகி உள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கையெழுத்திட்ட இந்த வழிகாட்டுதலின் நகல்கள் 16 தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைப்பதற்காக இரணைதீவுக்கு கொண்டு செல்லப்படும் போது பின்பற்ற வேண்டிய சில சிறப்பு வழிகாட்டுதல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் விரும்பினால் உடனடியாக இது குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

இறந்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்த இரணைதீவுக்கு இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.அதன்படி, கோவிட் தொற்றுநோயால் இறந்தவர்களின் உடல்கள் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு இரணைதீவுக்கு கொண்டு செல்லப்படும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடலை அடக்கம் செய்யும் போது,புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

உடலை சவப்பெட்டியில் வைக்க வேண்டும், அது எந்த காரணத்திற்காகவும் திறக்க அனுமதிக்கப்படாது. சீல் வைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top