திருகோணமலை - உப்புவெளி, அம்பாள் வீதி பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு குறித்த பெண்ணை தள்ளிவிட்டு அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் செல்லும் காட்சி சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ள அதேவேளை இதனை அடிப்படையாக வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top