விரைவில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கொவிட் பரவலை தடுப்பதற்கான விசேட செயலணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைப்பது உட்பட பல திருத்தங்கள் இதன் கீழ் செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அது மாத்திரமன்றி இலங்கைக்கு 7 மில்லின் ரஷ்ய கொவிட் தடுப்பூசிகளை முன்பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு தேவையான சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top