இலங்கை வானில் இன்று முன்னிரவு வித்தியாசமான ஒரு வெளிச்சப் பொருள் நகர்ந்து சென்றதை அடுத்து பொதுமக்கள் பலரும் வீதிகளில் குவிந்து அதனை அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பொருள் சர்வதேச விண்வெளி நிலையம் என கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) International Space Station இலங்கை மக்கள் இன்று வெற்றுக் கண்களால் பார்வையிடக்கூடியதாக இருந்தது.

குறித்த பொருள் முன்னிரவு 7.05 மணிக்கு ஆரம்பமாகி 7.12 மணிவரை சில நிமிடங்கள் தென்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருள் என்பதுடன் இதில் தற்போது 4 அமெரிக்கா, 2 ரஷ்யா, 1 ஜப்பான் என 7 விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் பயணிக்கின்றனர்

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top