வவுனியாவில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் நேற்று (1803) கைது செய்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று சென்ற பொலிஸார் அங்கு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்

இதன்போது உடமையில் கஞ்சா பொதி வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரையும், திருநாவற்குளத்தை சேர்ந்த ஒருவருமாக மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4600 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 19,23 வயதுடைய இருவரும், திருநாவற்குளத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top