நல்லதண்ணி தமிழ் மஹா வித்தியாலயத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற சென்ற மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களில் 9 மாணவர்கள் லக்சபான தோட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற்ற பின்னர் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் ஒரு மாணவி மஸ்கெலிய மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைளிக்கப்பட்ட பின்னர் பரீட்சையில் தோற்றியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top