யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கொடிகாமம் வரணி எல்லைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பயனின்றி இரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இரவு குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் கொடிகாமம் சென்றுவிட்டு வரணி நோக்கி செல்லும் போது வீதியால் சென்ற சைக்கிளுடன் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தினால் பலமாக அடியுண்ட இளைஞன் கோமா நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top