திகதி 20.05.2021


வழங் கிய இடம் : ஆறுமுகத்தான் புதுக்குளம், வவுனியா மாவட்டம்


நிதி உதவி : திருமதி. கஜீனா றமேந்திரன்


எதற்காக : புலம் பெயர்ந்து

பிரான்ஸ் தேசத்திலே வாழும் திருமதி கீர்த்திமோகன் சோபனா தம்பதியினரின் செல்வப் புதல்வன் அறின் அவர்களின் 4 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு எம் உறவுகளுடன் அன்பை பகிர்வதற்கு வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம அலுவலரின் வேண்டுகோளுக்கு அமைவாக 20.05.2021ஆந் திகதியன்று மிகவும் தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வன்னிமண் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. அதற்கான நிதி பங்களிப்பு வழங்கிய திரு. திருமதி – கஜீனா றமேந்திரன் குடும்பத்தினருக்கு எமது மன்ற தலைவர் உறுப்பினர்கள் அத்தோடு உதவியை பெற்ற குடும்பங்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு பிறந்தநாளை கொண்டாடும் அறின் அவர்கள் பல்கலையும் கற்று சீரும் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகின்றோம்.


இதனை பார்க்கும் ஒவ்வொரு உள்ளங்களும் உங்கள் பிள்ளைகளின்

கொண்டாட்ட தினங்களில் இப்படியான உதவிகளைச் செய்வதன் மூலம் உங்கள்

பிள்ளைகளுக்கு இரக்க குணம், உதவி செய்யும்

மனப்பாங்கு போன்ற நற் பண்புகள் தானாகவே வளரும். அத்தோடு எம் இனத்தின்

பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் பயன்பெற்று ஒரு நேரமாவது நல்ல உணவு கிடைக்க வழியும் உருவாகும்.


“””சிந்திப்போம் நாமும் சிறப்பாய் வாழ்வோம் மற்றோரை சிறு இன்புற வாழ வழி செய்வோம்”””


🙏நன்றி

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top