இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து இரண்டு பிள்ளைகள் தவிக்கும் சூழலில் அவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். இவர் மனைவி பிரதிமா. தம்பதிக்கு உத்தவ் பர்தேசி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

உத்தவ் புனேவில் தங்கி எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அவரின் இளைய சகோதரி எம்.சி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கைலாஷ் மற்றும் பிரதிமா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உ.யிரிழந்துள்ளனர்.

இதனால் உத்தவ் மற்றும் அவர் சகோதரியின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. உத்தவ் கூறுகையில், நாங்கள் இப்போது நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருக்கிறோம் என அவர் பேசும் போதே குரல் தழுதழுக்கிறது.

என் தந்தை பத்திரிக்கையில் வேலை செய்து வந்தார், அவர் வருமானத்தை நம்பி தான் எங்கள் குடும்பம் இருந்தது. எங்கள் இருவரின் படிப்பு செலவுக்காக மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் கடையையும் நடத்தி வந்தார்.

கடந்த மார்ச் 25ஆம் திகதி முதலில் என் தந்தை கொரோனாவால் உ.யிரிழந்தார், அடுத்தது ஏப்ரல் 27ஆம் திகதி என் தாயார் உ.யிரிழந்தார்.நான் இப்படி அனாதையாக ஆவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

இப்போது என்னை நான் கவனித்து கொள்வதோடு என் சகோதரியையும் கவனிக்க வேண்டும். எப்படியாவது படிப்பை முடிக்க வேண்டும் என நினைக்கிறேன், தற்போது வேலை தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.

நான் புனேவில் இருந்ததால் கடந்த இரண்டாடுகளாக என் பெற்றோரை பார்க்கவே இல்லை, என் தந்தையை காண வீட்டுக்கு வந்த போது அவர் ச.டலமாக ப.டுத்திருந்தார் என வேதனையுடன் கூறியுள்ளார். உத்தவ் பெற்றோர் மட்டுமில்லாமல் அவரின் மாமா, அத்தை, பாட்டி என குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொரோனாவால் உ.யிரிழந்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top