மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற பேச்சாளருமான மொஹமட் நஷீத் இன்று வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

53 வயதான நஷீத் தலைநகர் தலைநகர் மாலில் தனது காரில் ஏறிக்கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது மாலைத்தீவின் ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.பி) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

குண்டுவெடிப்பு தலைநகர் முழுவதும் கேட்டதாக இப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.   


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top