யாழ் நகரில் ராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி  சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுநாட்டில் அதிகரித்துள்ள கொரொனா தீவிர நிலையினையடுத்து  

நாடு பூராகவும் இன்று முதல் திங்கட்கிழமை அதிகாலை வரையிலான  மூன்று நாட்களுக்கு பொதுமக்கள்  வீடுகளை விட்டு  வெளியேறாத வகையில் ,  பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்

யாழ்ப்பாண குடாநாட்டில் பிரதான வீதிகளில்  ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு, வீதிகளில் அத்தியாவசிய தேவை, வைத்திய சேவையை பெறும் நோக்கில்  பயணிப்போர் தவிரந்த ஏனையோரை  இடை நிறுத்தி கடுமையாக எச்சரிக்கை செய்து  வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top