தமிழகத்தில் கர்ப்பமாக இருந்த இலங்கைத் தமிழ்ப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இதில் ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த 31 வயதுடைய ஜீவிதா என்பவரே உயிரிழந்துள்ளார். அத்தோடு குறித்த பெண்ணுக்கு முதல் திருமணம் நடந்து அவர் அண்மையில் உயிரிழந்திருந்தார்.


மேலும் இதனையடுத்து குறித்த பெண் விருப்பாட்சி இலங்கை முகாமை சேர்ந்த 37 வயதுடைய அருள்மோகன் என்பவரை இரண்டாவது திருமணம் முடித்துள்ளார்.அத்தோடு குறித்த நபரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலையில் ஜீவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.


இந்த நிலையில் விருப்பாட்சி இலங்கை முகாமில் உள்ள தனது வீட்டில் ஜீவிதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஜீவிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top