பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச விரைவில் நாடாளுமன்றம் வரவுள்ளதாகவும் அவருக்கு பிரதமர் மகிந்த வசமுள்ள நிதியமைச்சு ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது நிதியமைச்சு பதவி அவருக்கு வழங்கப்படாது எனவும் அது தொடர்ந்தும் பிரதமர் மகிந்தவின் வசமே இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை இணைத்து புதிய அமைச்சொன்று பசில் ராஜபக்சவிற்காக உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் நிதியமைச்சின் பல செயற்பாடுகள் இந்த அமைச்சிற்கே மாற்றப்படும் எனவும் அவை தெரிவித்துள்ளன.எனினும் அது குறித்த இறுதி முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்றும், அதில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும், எனினும் பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் செல்வது உறுதி என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.   


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top