மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இநத தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு சில பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அமுலில் உள்ளது.


இந்த நிலையில் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்திய வகையில் இன்று முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top