தமிழகத்தில் கணவர், மாமனார், மாமியார் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் மருமகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த். 74 வயதாகும் இவருக்கு புஷ்பா பாய் என்ற 70 வயது மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு ஷீத்தல் என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர். ஷீத்தல், ஜெயமலா என்ற பெண்ணை திருமணம் செய்து, தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

ஜெயமலா தற்போது புனேவில் இருக்கிறார். ஜெயமாலா - ஷீத்தல் தம்பதிக்கு திருமணம் ஆகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால், ஜெயமாலா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சுமார் 5 கோடி மதிப்பு கொண்ட சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார்.

மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார். இதனால் இது வாக்குவாதமாகவே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தான் சம்பவ தினத்தன்று, ஜெயமலா புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த மாமனாரிடம், ஒரு நோயாளியை எனக்கு எதுக்கு திருமணம் பண்ணி வெச்சீங்க. உங்க மகனால்தான் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது.

அதன் காரணமாக தான் 5 கோடி ஜீவனாம்சம் வேண்டும், சொத்திலும் பங்குதர வேண்டும் என்று கேட்கிறேன் என்று ஆத்திரத்துடன் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோவத்தின் உச்சிக்கு சென்ற ஜெயமலா கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டி, தான் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டுக் கொன்றுள்ளார்.

துப்பாக்கியால் சுடும்போது, அந்த சத்தம் வெளியே கேட்டுள்ளது. இருப்பினும், அந்த தெரு முழுக்க பட்டாசு வெடித்து கொண்டு இருந்ததால், இதுவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள் நினைத்துள்ளனர். ’

அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் உடனடியாக ஜெயமலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை பார்க்கும் போது ஜெயமலா திட்டமிட்டு தான் இந்த கொலைகளை செய்துள்ளார் என்பது தெரிகிறது. அவர், ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதுபோலவும் தெரியவில்லை.

ஏனெனில், ஒவ்வொருவரையும் 5 முறை துப்பாக்கியால் நிறுத்தி நிதானமாக சுட்டு கொன்றுள்ளார். அதனால் இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலை. அதேபோல, இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழகத்தை சேர்ந்தது கிடையாது.

வெளியில் இருந்து வந்தது. லாக்கர் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இன்னும் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், அவர்களை தேடி வருகிறோம், விரைவில் கைது செய்வோம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top