நாட்டில் மேலும் 240 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 81,707 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 961ஆக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் முற்பகல் 10 மணி வரையில் 447 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதாக தொற்றுநோய் தடுப்பு பணிமனை தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட் நோய்க்குள்ளானவர்களுள் தற்போது 4 ஆயிரத்து 289 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top