நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



அதன்படி, பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பிரிவே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா நோயாளர்கள் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top