கனடாவில் கொடிய கொரோனா தொற்றினால், இதுவரை 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 70ஆயிரத்து 033பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 30ஆயிரத்து 430பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 567பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுவரை எட்டு இலட்சத்து 17ஆயிரத்து 586பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top