இலங்கை மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாமை இலங்கை தமிழ் மக்களுக்கு இழைத்த பெரும் துரோகம் என டிடிவி. தினகரன் சாடியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் குறித்து 6 நாடுகளின் சார்பில் நேற்றையதினம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான இந்தியா கலந்துகொள்ளாமை தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் டிடிவி. தினகரன் இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதுடன் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top