யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடாக பயணிக்கும் பேருந்துகளை வழிமறித்து வவுனியாவில் இறங்கவுள்ள பயணிகளிடமே குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளின் ஊடாக வவுனியாவில் தொற்று பரவுவதை தடுப்பதற்கே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top