யாழ்ப்பாணம் – நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள்

வங்கி, கன்னாதிட்டிக் கிளையின் உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் நல்லூர் வீரமாகாளி அம்மன்
வீதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் 40 வயதான சிறிஸ்கந்தராஜா பகீரதன்
என்பவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.மின்தடை காரணமாக வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால் உடனடியாக அவரை மீட்டு
வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிககுருதிப் போக்குகள் காரணமாக உயிரிழப்பு நேர்ந்தது என்று

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை மனைவியின் தாய் வீட்டு வாசலில் இவ் விபத்து நடந்தது காயம் பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு அதிக நேரம் இருந்தார் எவரும் 1km தூரம் உள்ள வைத்தியசாலை க்கு கொண்டு செல்ல வில்லை. Ambulance service அழைத்த போது ambulance தூர இடத்துக்கு சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது. இறுதியாக ஒரு உயிர் துடி துடித்து இறந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top