நேற்றையதினம் தலைமன்னாரில் பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

தலைமன்னார் - பியர் பகுதியில் நேற்றய தினம் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மீது புகைரதம் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் 09 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார்,

பாடசாலை சேவை பேருந்தின் சாரதி மற்றும் ரயில் பாதுகாப்பு கடவையின் கடமைநேர காவலாளி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top