நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திஅதிகாலை 4 மணிவரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும். முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மூன்று தினங்களில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி பயணிக்க எந்தவித அனுமதியுமில்லையென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.


அத்துடன், இக்காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என்றும் எனினும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார் தனிமைப்படுத்தல் அல்லது பயண விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் , நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் பிரகாரம், மீறுவோருக்கு எதிராக, 6 வருடங்கள் தொடர் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது 10ஆயிரம் ரூபாய் தண்டம் இன்றேல், இரண்டும் ஒரேதடவையில் விதிக்கப்படலாம் எனவும் கூறினார்.


எனினும் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியும் எனவும், வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். இதேவேளை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள குறித்த 3 நாட்களின் பின்னர் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே தேசிய அடையாள அட்டை முறை அமுல்படுத்தப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top