கொரோன பரவல் காரணமாக நேற்றைய தினம் அரசாங்கத்தினால் மாவட்ட ரீதியில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான சாலைகள் மாலை 6 மணி வரை திறந்து விற்பனை நடவடிக்கை இடம் பெற்று வந்தன இந்த நிலையில் மது பிரியர்களும் தொடர்சியாக மதுபான பதுக்களில் ஈடுபடாது அன்றாடம் அரை ,கால் என  அருந்தி திருப்தி அடைந்து வந்தனர்

இந்த நிலையில் இடியை போன்று இன்றைய தினம் தொடக்கம் வருகின்ற திங்கட் கிழமை வரை நாடு முடக்கப்படுவதாகவும் மதுபான சாலை மூடப்படுபடும் எனவும் அரசாங்கத்தினால் அறிவித்தல் வெளியாகிய நிலையில் ஒரு சில குடும்பத்தலைவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரிசையில் நிற்க  மது பிரியர்கள் என்ன செய்வது என்று அறியாமல் மன்னார் மது பான சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

இருப்பினும் மதுபான சாலை மாலை 6 மணியுடன் மூடப்பட்ட நிலையில் நீண்ட நேரம் மது பானம் வாங்குவதற்கு என வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான குடிமகன்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

இந்த நிலையில் மீண்டும் மதுபான சாலை திறக்கும் நாளுக்காக காத்திருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர் மன்னார் வாழ் குடிமகன்கள்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top