இலங்கையில் வலைத்தளங்கள் ஊடுருவல்களுக்கு உள்ளாகும் ஆ பத்து இருப்பதாக கணணி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம் எ ச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே இணையத்தின் ஊடாக பொது பயன்பாடுகளை பராமரிக்கும் அனைத்து அரச நிறுவனங்களும் க வனமாக செயற்படுமாறு கணணி தயார் நிலை மையம் கோரியுள்ளது.

மையத்தின் தகவல் பா துகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.அண்மைக்கால உலகளாவிய மற்றும் உள்ளூர் இணையப்பா துகாப்பு சம்பவங்களின் கீழ் இது ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியன்று இந்த இணைய ஊடுருவல் வழமையாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் வலைத்தள செயலிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனித்ததாக அவர் கூறியுள்ளார்.எனவே, இந்த காலகட்டத்தில் அரசாங்க வலைத்தளங்கள் ஊடுருவக்கூடிய ஆ பத்து குறித்து விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பொறுப்பான அதிகாரிகளையும் கோருவதாக மீகஸ்முல்ல கூறியுள்ளார்.

இந்த நிலையில் சை பர் ப டை என்ற அமைப்பே கடந்த காலங்களில் இந்த நாளில் இணைய ஊ டுருவல் நடத்தி வந்ததாக கணணி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top